An Najaath
முஸ்லிம் பெற்றோர்களின் சவால் ! வெல்லப் போகிறோமா ? வீழப் போகிறோமா ? தற்போது டீன் ஏஜில் மகன் அல்லது மகளை வைத்துள்ள பெரும்பாலான பெற்றோர்களின் பெரும் கவலை இது ! அதாவது நமது பிள்ளைகள் காதல் கீதல் செய்து தன் வாழ்க்கையை தானே தெரிவு செய்துகொண்டு வழி புரண்டு விடுமோ ? என கவலைப் படாத தாய் தந்தை யாரும் இருக்கமாட்டார்கள்! ஆனாலும் வீடு கட்டவும் நகை நட்டு வாங்கவும் அன்னாடம் பொருளாதார தேடலில் தினம் தினம் அலைகிறோம்! இப்பொழுது வரும் தமிழ் படங்களாக இருக்கட்டும் அல்லது டிவி நிகழ்சிகளாக இருக்கட்டும், ஆண், பெண் இருபாலும் கூச்சம் இல்லாமல் பேசுவதும் அரட்டை அடிப்பதும் காட்டப் படுகிறது. இந்த விஷம் நம் பிள்ளைகளை மட்டுமல்ல, பெற்ற தாய் தகப்பனையும் அறிவு ரீதியாக வீணாக்கிக் கொண்டிருகிறது. கைத் தொலைபேசிகளை கட்டுப் படுத்துவதிலோ, இன்டர்நெட் உபயோகத்தை அவதானிபதாலோ தீர்க்க முடியும் என்பது 10 % உண்மையாக இருக்கலாம். 90 % தீர்வு என்ன வென்றால் குடும்பம் இஸ்லாமாக இருக்கவேண்டும்.பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடைப்பட்ட உறவு ஒளிவு மறைவு இன்றி குடும்பத்தினர்களுக்கு மத்தியில் நட்பு இருக்க வேண்டும். தமிழ் சினிமாவில் வரும் நாயகன் நாயகி எல்லாம் கேவலமான தொழில் புரியும் கூத்தாடிகள் என்பதை வளரும் தலை முறைக்கு எடுத்து சொல்ல வேண்டும்....இது போன்ற மேலும் கருத்துக் களை ஜும்மா மேடைகளில் அழகாக அறிவுபூர்வமாக எடுத்துச் சொல்ல பள்ளிவாசல் நிர்வாகிகளும் இமாம்களும் முன்வர வேண்டுகிறோம். எல்லா ஜமாஅத் களும் இந்த முயற்சிகளை செய்யுங்கள்".
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக