ஆணையும் பெண்ணையும் சமப்படுத்துகின்ற ஒரு முயற்சி பெண்ணிலைவாதம் என்ற பெயரில் இன்று பரவலாக இடம்பெற்று வருகின்றது,
ஆனால் எம்மைப் படைத்த இறைவன் ஆணும் பெண்ணும் வித்தியாசமானவர்கள் என்பதை அல்குர்ஆனில் மிகத் தெளிவாக சொல்லி விட்டான், ஆணை நேரடியாக மண்ணால் படைத்த அல்லாஹுத் தஆலா பெண்ணை அந்த ஆணிலிருந்துதான் படைத்தான்.
இது ஆண் சிறந்தவனா? பெண் சிறந்தவளா? என்பதற்கான விவாதமல்ல. மாற்றமாக படைக்கப்பட்ட விதத்திலிருந்தே வித்தியாசப்படும் இந்த ஆணையும் பெண்ணையும் ஒரே மாதிரி நோக்க வேண்டும் என்பது மனித இயல்புக்கெதிரான சவாலாகும்.
ஆனால் மிகப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் ஆணும் பெண்ணும் சமன் என்று கூறியவர்கள் எல்லாம் பெண்ணின் மானத்தைக் கப்பலேற்றும் வேலையைத் தவிர வேறு எதனையும் செய்யவில்லை என்பதுதான், அது மட்டுமல்ல இவர்கள் சொல்வது போல் உண்மையில் ஆணும் பெண்ணும் சமனாக இருந்தால் ஒலிம்பிக்கில் ஆண்களையும் பெண்களையும் ஒரே போட்டியில் ஒன்றாகக் கலந்து கொள்ள வைக்கலாம் தானே! கிரிக்கட் போட்டிகளையும் உதைபந்தாட்டப் போட்டிகளையும் ஆண்களும் பெண்களும் கலந்து வைக்கலாம் தானே!! ஏன் இவர்கள் அப்படியெல்லாம் செய்வதில்லை? அப்படி யாராவது செய்தால் கூட அதனை அநீதி என்று கூப்பாடு போடுவார்கள்.
ஆனால் இஸ்லாம் ஆணையும் பெண்ணையும் போட்டி போடுகின்றவர்களாகப் பார்க்கவில்லை, மாற்றமாக மாற்றமாக முழுமைப்படுத்துகின்றவர்களாகத் தான் பார்க்கின்றது, இருவரையும் இஸ்லாம் ஓரிடத்தில் சமப்படுத்துகின்றது, அதுதான் தக்வாவாகும். அந்த இடத்தில் ஆண் பெண் வித்தியாசம் இல்லை யார் அதிகம் தக்வா உள்ளவராக இருக்கின்றாரோ அவர்தான் அல்லாஹ்வின் பார்வையில் சிறந்தவராவார்.
ஆனால் உடல் ரீதியாக, உளவியல் ரீதியாக, அறிவு ரீதியாக, உணர்வுகள் ரீதியாக, ஹோர்மோன்கள் ரீதியாக என அனைத்து வகையிலும் ஆண்களும் பெண்களும் வித்தியாசப்படுகின்றார்கள், ஏன் இந்த வித்தியாசம், வித்தியாசமான இந்த இரண்டு இயல்புகளும் ஒன்றுசேரும் போதுதான் மனிதவாழ்க்கை முழுமை பெறுகின்றது. அதை விடுத்து விட்டு பெண்களும் ஆண்களைப் போன்று இருக்க வேண்டும், ஆண்கள் செய்கின்றவற்றை பெண்களும் செய்ய வேண்டும் என்ற அநீதியான கோஷம் எழுந்ததன் விளைவுதான் இன்று வீட்டிலும் நாட்டிலும் ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன.
உலகளாவிய ரீதியில் பொதுவாகவும் மேற்கில் குறிப்பாகவும் குடும்ப வாழ்க்கை சீரழிந்து போயிருப்பதற்கான அடிப்படைக் காரணம் பெண்கள் ஆண்களின் வேலையை செய்யப் போனதுதான். இதனை நான் சொல்லவில்லை, பெண்ணிலைவாதத்தின் தூண்களில் ஒன்றாக இருந்த LAURA DOYLE என்ற பெண்மணி சொல்கின்றார், இரண்டு மூன்று திருமணங்கள் முடித்தும் அவரது திருமண வாழ்க்கை தொடர்ந்தும் தோல்வியிலேயே முடிவுற்றிருக்கின்றது, அதன் பின்னர் தான் அவர் அதற்கான காரணத்தை சிந்திக்கின்றார்... அப்போது அவருக்கு ஓர் உண்மை புலப்படுகின்றது, 'நான் ஒரு பெண்ணாக இல்லை, அது தான் காரணம்' என்பதை அவர் கண்டறிகின்றார். அதன் பின்னர் மீண்டும் இன்னொரு திருமணம் முடித்து இன்று வரை தனது கணவனுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடாத்தி வருகின்றார். தனது அனுபவத்தை "THE SURRENDERED WIFE" என்ற ஒரு புத்தகத்தில் அவரே எழுதுகின்றார். (இந்த புத்தகத்தை யாரும் AMAZON.COM இல் வாங்கலாம்)
இதுதான் யதார்த்தம், இந்த யதார்த்தத்தை இன்று யாரெல்லாம் இந்த பிழையான, மனித இயல்புக்கு ஒத்துவராத சிந்தனைக்கு காரணமாக இருந்தார்களோ அவர்களே ஒப்புக் கொள்கின்றார்கள், ஆனால் கவலை யாதெனில் இந்த முஸ்லிம் சமூகத்துக்குள் காலாவதியாகிப் போன இந்த சிந்தனையின் சீடப்பிள்ளைகள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான்.
யாராவது திருமணம் முடித்து திருமண வாழ்வில் வெற்றி பெற வேண்டுமாயின் அவர்கள் ஆணும் பெண்ணும் வித்தியாசமானவர்கள் என்ற உண்மையை விளங்கி அந்த வித்தியாசங்களைப் படித்து அதனை தமது வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாத போது திருமணங்கள் நடக்கும் ஆனால் இருமனங்களும் ஒரு நாளும் ஒத்துவாழ முடியாது.
ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது!
உதாரணாமக பெண்ணால், தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும் முடியும்.
ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்ச்சியைப்பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேச முடியாது! ( அவர்களின் கவணம் தொலைக்காட்சியில் இருக்கும் அல்லது தொலை பேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது! )
மொழி.
பெண்களால் இலகுவாக பல மொழிகளைக்கற்றுக்கொள்ள முடியும்!
அதனால் தான் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் பலர் பெண்களாக இருக்கின்றார்கள். 3 வயது ஆண்குழந்தையுடன் ஒப்பிடும் போது அதே வயது பெண்குழந்தை அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருப்பதற்கும் மூளையின் இந்த அமைப்பே காரணம்.
பகுத்துணரும் திறன் (ANALYTICAL SKILLS)
ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்து தீர்மானத்திற்குரிய படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாளான இடம் ஒதுக்கப்படுகிறது. அதனால், எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆணகளின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
ஆனால், பெண்களின் மூளையால் இதை செய்ய முடியாது. அது மட்டுமல்லாது பெண்களால் ஆண்கள் வைக்கும் தீர்மானத்தையும் உணர்ந்துகொள்ள முடியாது.
பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது!
உதாரணாமக பெண்ணால், தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும் முடியும்.
ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்ச்சியைப்பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேச முடியாது! ( அவர்களின் கவணம் தொலைக்காட்சியில் இருக்கும் அல்லது தொலை பேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது! )
மொழி.
பெண்களால் இலகுவாக பல மொழிகளைக்கற்றுக்கொள்ள முடியும்!
அதனால் தான் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் பலர் பெண்களாக இருக்கின்றார்கள். 3 வயது ஆண்குழந்தையுடன் ஒப்பிடும் போது அதே வயது பெண்குழந்தை அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருப்பதற்கும் மூளையின் இந்த அமைப்பே காரணம்.
பகுத்துணரும் திறன் (ANALYTICAL SKILLS)
ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்து தீர்மானத்திற்குரிய படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாளான இடம் ஒதுக்கப்படுகிறது. அதனால், எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆணகளின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
ஆனால், பெண்களின் மூளையால் இதை செய்ய முடியாது. அது மட்டுமல்லாது பெண்களால் ஆண்கள் வைக்கும் தீர்மானத்தையும் உணர்ந்துகொள்ள முடியாது.
வாகனம் ஓட்டுதல்.
வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது, தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை (சிக்னல்ஸ்) முன் கூட்டியே விரைவாக கணித்து அதற்கு ஏற்றபோல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடியும்.
ஆனால், பெண்களின் மூளை தாமதமாகவே இந்த கணிப்புக்களை மேற்கொள்ளும்.
இதற்கு காரணம், ஆண்களின் “ஒரு பணியை செய்யக்கூடிய மூளைத்திறன்”ஆகும். உதாரணமாக வாகனம் செலுத்தும் போது இசையைக்கேட்டுக்கொண்டிருந்தாலும் ஆண்களின் கவணம் வாகனம் செலுத்துவதில் தான் இருக்கும். பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள்.
பொய்ப்பேச்சு!
ஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக பொய் என்பதை அறிந்துகொள்வார்கள்! ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணரமுடிவதில்லை.
காரணம் பெண்கள் பேசும் போது 70% ஆன முக மொழியையும் 20% உடல் மொழிகளையும் 10% ஆன வாய் மொழியையும் உணர்கின்றனர். ஆண்களின் மூளை அவ்வாறானதில்லை!
பிரச்சனைக்கான தீர்வுகள்.
பல பிரச்சனைகள் இருக்கும் ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தீர்வை படிப்படியாக இனங்காணும். இதனால் பிரச்சணையுள்ள ஆண்கள் தனிமையில் தமது தீர்வுகளை கண்டுகொள்வார்கள்.
ஆனால், இதே அளவு பிரச்சனையுள்ள ஒரு பெண்னின் மூளையானது பிரச்சனைகளை தனித்தனியாக பிரித்தறியாது…. யாராவது ஒருவரிடம் தமது முழுப்பிரச்சனைகளையும் வாய்மூலமாக சொல்வதனூடாக திருப்தியடைந்துகொள்ளும்.
சொன்னதன் பின்னர், பிரச்சனை தீர்ந்தாலும் தீராவிட்டாலும் அவர்கள் நின்மதியாக படுத்துறங்குவார்கள்.
வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது, தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை (சிக்னல்ஸ்) முன் கூட்டியே விரைவாக கணித்து அதற்கு ஏற்றபோல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடியும்.
ஆனால், பெண்களின் மூளை தாமதமாகவே இந்த கணிப்புக்களை மேற்கொள்ளும்.
இதற்கு காரணம், ஆண்களின் “ஒரு பணியை செய்யக்கூடிய மூளைத்திறன்”ஆகும். உதாரணமாக வாகனம் செலுத்தும் போது இசையைக்கேட்டுக்கொண்டிருந்தாலும் ஆண்களின் கவணம் வாகனம் செலுத்துவதில் தான் இருக்கும். பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள்.
பொய்ப்பேச்சு!
ஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக பொய் என்பதை அறிந்துகொள்வார்கள்! ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணரமுடிவதில்லை.
காரணம் பெண்கள் பேசும் போது 70% ஆன முக மொழியையும் 20% உடல் மொழிகளையும் 10% ஆன வாய் மொழியையும் உணர்கின்றனர். ஆண்களின் மூளை அவ்வாறானதில்லை!
பிரச்சனைக்கான தீர்வுகள்.
பல பிரச்சனைகள் இருக்கும் ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தீர்வை படிப்படியாக இனங்காணும். இதனால் பிரச்சணையுள்ள ஆண்கள் தனிமையில் தமது தீர்வுகளை கண்டுகொள்வார்கள்.
ஆனால், இதே அளவு பிரச்சனையுள்ள ஒரு பெண்னின் மூளையானது பிரச்சனைகளை தனித்தனியாக பிரித்தறியாது…. யாராவது ஒருவரிடம் தமது முழுப்பிரச்சனைகளையும் வாய்மூலமாக சொல்வதனூடாக திருப்தியடைந்துகொள்ளும்.
சொன்னதன் பின்னர், பிரச்சனை தீர்ந்தாலும் தீராவிட்டாலும் அவர்கள் நின்மதியாக படுத்துறங்குவார்கள்.
தேவைகள்.
மதிப்பு, வெற்றி, தீர்வுகள், பெரிய செயலாக்கங்கள் என்ற ரீதியில் ஆண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.
ஆனால், உறவுகள், நட்பு, குடும்பம் என்ற ரீதியில் பெண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.
மகிழ்ச்சியின்மை.
ஒரு பெண்ணிற்கு தனது காதல்/ உறவுகளிடையே பிரச்சனை அல்லது திருப்தியின்மை இருந்தால்… அவர்களால், அவர்களின் வேலையில் கவணம் செலுத்த முடியாது.
ஆனால், ஒரு ஆணிற்கு தனது வேலையில் பிரச்சனை இருப்பின் அவர்கள் காதல்/ உறவுகளில் கவணம் செலுத்த முடியாது.
உரையாடல்.
பெண்கள் உரையாடும் போது மறைமுக மொழிகளை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால், ஆண்கள் நேரடி மொழியையே பயன்படுத்துவார்கள்.
நடவடிக்கை.
பெண்கள் சிந்திக்காமல் அதிகம் பேசுவார்கள். ஆண்கள் சிந்திக்காமல் அதிகம் செய்வார்கள்!
ஆண்கள், பெண்களிடையேயான உறவுகளில் ஏற்படும் பிரச்சனைக்கான உண்மையான அறிவியல் காரணத்தை தற்போது உணர்ந்திருப்பீர்கள்.
மதிப்பு, வெற்றி, தீர்வுகள், பெரிய செயலாக்கங்கள் என்ற ரீதியில் ஆண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.
ஆனால், உறவுகள், நட்பு, குடும்பம் என்ற ரீதியில் பெண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.
மகிழ்ச்சியின்மை.
ஒரு பெண்ணிற்கு தனது காதல்/ உறவுகளிடையே பிரச்சனை அல்லது திருப்தியின்மை இருந்தால்… அவர்களால், அவர்களின் வேலையில் கவணம் செலுத்த முடியாது.
ஆனால், ஒரு ஆணிற்கு தனது வேலையில் பிரச்சனை இருப்பின் அவர்கள் காதல்/ உறவுகளில் கவணம் செலுத்த முடியாது.
உரையாடல்.
பெண்கள் உரையாடும் போது மறைமுக மொழிகளை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால், ஆண்கள் நேரடி மொழியையே பயன்படுத்துவார்கள்.
நடவடிக்கை.
பெண்கள் சிந்திக்காமல் அதிகம் பேசுவார்கள். ஆண்கள் சிந்திக்காமல் அதிகம் செய்வார்கள்!
ஆண்கள், பெண்களிடையேயான உறவுகளில் ஏற்படும் பிரச்சனைக்கான உண்மையான அறிவியல் காரணத்தை தற்போது உணர்ந்திருப்பீர்கள்.