ரங்கராஜ் பாண்டேவின் ஈயடிச்சான் காப்பி
து.கொ.ப.செ பதவி பறி போய், இன்னோவா பறி போகுமா என்று அச்சத்தில் இருக்கிற நா.ச வுடன் தந்தி டி.வியில் ரங்கராஜ் பாண்டே எடுத்த நேர்காணலை 02.01.2016 இரவு பார்த்தேன். குடும்பத்தோடு ரசிக்கிற காமெடி படம் போல அந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.
நா.ச வின் பதவி பறிப்பிற்கு காரணம் என்று சொல்லப்படுகிற குணசேகரன் எடுத்து01.01.2016 அன்று புதிய தலைமுறையில் ஒளிபரப்பான நேர்காணலின் பதிவை இன்றுதான் யுடியூபில் பார்த்தேன்.
திரு குணசேகரன் என்ன கேள்விகளையெல்லாம் 01.01.2016 அன்று கேட்டாரோ, அதைத்தான் 02.01.2016 அன்று ரங்கராஜ் பாண்டே கேட்டுள்ளார்.
ஆக சொந்த சரக்கில்லாமல் அடுத்தவரை காப்பியடித்துள்ளார் ரங்கராஜ் பாண்டே என்பது தெளிவாக நிரூபணமாகியுள்ளது.
இப்படியிருக்கும்போதே இவரது வெட்டி பந்தாவுக்கும் உதாருக்கும் அளவே இல்லாமல் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக